"அவங்க எனக்கு துரோகம்"... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலா வெளியிட்ட முதல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறையாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது "சகோதர சகோதரிகள் அனைவருக்கு ரொம்ப நன்றி மக்கா. உங்க எல்லாரையும் நான் நேசிக்கிறேன். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த பொழுது எனது நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் பலர்எனக்கு துரோகம் செய்துள்ளனர்.

Bala first post after biggboss4tamil பாலா வெளியிட்ட முதல் பதிவு

ஆனால் நீங்கள் எனக்கு உறுதுணையாக நின்றீர்கள். எப்பொழுதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எந்த மனவருத்தமும் இல்லை. என்னுடைய இதயத்தில் இருந்து விளையாடினேன்"  என்று கூறியுள்ளார். அதேபோல் நடுவில் அவர் செய்த சில செயல்களுக்கு அவருக்கு ரெட் கார்டு வழங்கப்படும் என்று சிலர் கருத்து வெளியிட்டனர். அதற்கு பதிலளிக்கும் வண்ணம் "அவர் என் ரெட் கார்டு, எடுத்து பார்" என்ற நடிகர் சிம்புவின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதேபோல ஹாசன் நேற்றைய தினம் பைனல் நிகழ்ச்சியின் போது ஷெரின் மற்றும் பாலா இடையே ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதுபற்றி பாலா ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "அன்பார்ந்த ரசிகர்களே சிலர் இன்ஸ்டாகிராம் மட்டும் பேஸ்புக்கில் ஷெரின் பற்றி மோசமான கமெண்டுகளை பதிவிடுவதாக கேள்விப்பட்டேன். அவர் என்னுடைய மிக நல்ல நண்பர். தயவுசெய்து அப்படி மோசமான கமெண்ட்டுகளை யாருடைய சமூக வலைத் தளத்திலும் பதிவிட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

"அவங்க எனக்கு துரோகம்"... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலா வெளியிட்ட முதல் பதிவு வீடியோ

Tags : Bala

தொடர்புடைய இணைப்புகள்

Bala first post after biggboss4tamil பாலா வெளியிட்ட முதல் பதிவு

People looking for online information on Bala will find this news story useful.