www.garudabazaar.com

Video: 'சனம்' அளவுக்கு கூட அவங்க... ஆரியுடன் சேர்ந்து 'ஸ்கெட்ச்' போடும் அனிதா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் எண்ட்ரிக்கு முன் போட்டியாளர்கள் பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகின. அதில் ஆரியுடன் அமர்ந்து அனிதா பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர், '' அர்ச்சனா மாஸ்க் போட்டுக்கொண்டு இருக்கிறார். அவரின் உண்மையான ஆட்டம் வெளிவரவில்லை. நாம் அவரை கவனிக்க தவறி விட்டோம்.

Anitha Sampath and Aari Arjunan talks about Archana

சனம் கேம் ஆடின அளவு கூட அவங்க விளையாடல. ஆனா சனம் வெளிய போய்ட்டாங்க. அர்ச்சனா உள்ள இருக்காங்க,'' என தெரிவித்தார். இதைப்பார்த்து தான் பிக்பாஸ் பைனலுக்கு போக தகுதி அற்றவர்கள் என்ற டாஸ்க் தோன்றி இருக்கும் போல. பின்னர் கமல் இதை பொதுவாக கேட்க அப்போதும் அனிதா பைனல் போக அர்ச்சனா, கேப்ரியலா இருவரும் தகுதி இல்லாதவர்கள் என ஓபனாக பேசினார்.

ஆனால் இந்த பைனல்ஸ் பஞ்சாயத்து பட்டியலில் பாலாஜி, ஆஜீத், ரம்யா ஆகிய மூவரும் இடம்பெறவில்லை. இதைப்பார்த்த கமல் இனிமேலாவது பாதுகாப்பாக விளையாடாதீர்கள் என அட்வைஸ் கூறினார். நிஷா வீட்டைவிட்டு வெளியேறியதால், இனி பிக்பாஸ் வீட்டில் பல பஞ்சாயத்துகள் மற்றும் சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Anitha Sampath and Aari Arjunan talks about Archana

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.