www.garudabazaar.com

அமிதாப் பச்சன் & SJ சூர்யாவின் உயர்ந்த மனிதன்.. முடிவுக்கு வந்த பிரச்சனை.. பரபரப்பு அறிக்கை..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 06, பிப்ரவரி 2022:- அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே உண்டான பிரச்சனை முன்னதாக பரபரப்பாக இருந்தது.

Amitabh Bachchan SJ Suryah Uyarntha Manidhan The Great Man update

உயர்ந்த மனிதன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தமிழ் இயக்குநர் & நடிகர் எஸ்.சூர்யா இணைந்து நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’ என்கிற நேரடி தமிழ்ப்படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார். கடந்த ஆண்டுக்கு முன்வரை இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது.

Amitabh Bachchan SJ Suryah Uyarntha Manidhan The Great Man update

அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா

இதனிடையே படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இடம் பெறும் ஃபோட்டோவும், அமிதாப் பச்சன் பதிவு செய்த ட்வீட்டும் வைரலாகியிருந்தது. பின்னர் இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் விலகியதாக பேசப்பட்டு வந்தன.  அப்போது இதற்கு விளக்கம் அளித்திருந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா, அமிதாப் பச்சனுக்கும் மற்றும் உயர்ந்த மனிதன் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படுவதாகவும் கூறியிருந்தார்.

Amitabh Bachchan SJ Suryah Uyarntha Manidhan The Great Man update

இரு மொழிப்படம்.. எஸ்.ஜே.சூர்யா புதிய தகவல்..

இந்நிலையில் தான் உயர்ந்த மனிதன் திரைப்படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ஒரு பரபரப்பு அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதன்படி உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவிருப்பதாகவும், தமிழில் உயர்ந்த மனிதன் என்கிற பெயரிலும், இந்தியில் தி கிரேட் மேன் (The Great Man - Tera Yaar Hoon Main) என்கிற பெயரிலும் என இருமொழிப்படமாக இந்த படம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுக்கு வந்த பிரச்சனை .. வெளியான அறிக்கை

அத்துடன் இந்த படத்தின் தயாரிப்பினை ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் கையிலெடுக்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா இதற்கான லீகல் க்ளியரன்ஸ் அறிக்கை, அதிகாரப்பூர்வ பொது அறிக்கையாக மும்பை இதழ்களில் வெளியாகியுள்ளதையும் சுட்டிக்காட்டி அந்த அறிக்கையையும் பகிர்ந்துள்ளார்.

பெருமைக்குரிய விஷயம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழ் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா மற்றும் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம் நிச்சயமாக பெருமைக்குரிய ஒன்று என சொல்லி வாழ்த்து சொல்லி வருவதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

எஸ்.ஜே.சூர்யாவின் இதர பட விபரங்கள்..

அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை தந்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்து ‘பொம்மை’ உள்ளிட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்பதும், இவர்கள் இருவருமே ஏற்கனவே மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜெயம் ரவி - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் படத்துக்கு டைட்டில் இதுவா..? தெறி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Amitabh Bachchan SJ Suryah Uyarntha Manidhan The Great Man update

People looking for online information on Amitabh Bachchan, Maanaadu, Sj suryah, TheGreatMan, Uyarntha Manithan, UyarnthaManidhan will find this news story useful.