www.garudabazaar.com

தனியே சென்று அழுத அக்‌ஷரா!! .. ஆறுதல் சொன்ன வருணிடம் அவரே சொன்ன உருக்கமான காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இதுவரை 70 நாட்களை கடந்து போட்டியாளர்கள் விளையாண்டு வருகின்றனர். விளையாண்டு வருகின்றனர் என்று சொல்வதைவிட வாழ்ந்து வருகின்றனர் என்று சொல்லலாம். உணவு, பொழுதுபோக்கு, பேச்சு, வேடிக்கை, சண்டை, சச்சரவு, உறவு புரிதல் என அனைத்து விதமான வாழ்க்கை நிகழ்வுகளும் அவர்களுக்கு தற்போதைக்கு இந்த வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்களுடன் தான் நடந்து கொண்டிருக்கிறது.

akshara reddy cries and shared the reason to arun biggboss

ஒரு வாரம் வீட்டு நினைப்பாக இருந்தாலும் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள்,, வீட்டுக்குள் வைக்கப்படும் டாஸ்க் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி விளையாடும்போது வீட்டை மறந்து போட்டியாளர்களுடன் ஐக்கியம் ஆகி விடுகின்றனர். இதேபோல் குறிப்பிட்ட எமோஷனுடன் கலந்துவிடவும் செய்வார்கள்.

akshara reddy cries and shared the reason to arun biggboss

இதனிடையே தற்போது 70 நாட்கள் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவதை அடுத்து, இதனை குறிப்பிட்டு இனி யாரும் அடுத்தவர்களுக்காக விளையாட வேண்டாம் அனைவரும் தங்களுக்கு தாங்களே விளையாட வேண்டும் என்பதற்காக புதிய புதிய டாஸ்குகளை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகிறார் பிக்பாஸ்.

akshara reddy cries and shared the reason to arun biggboss

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு, இறுதி போட்டிகள் நடைபெற இருப்பதாகவும், கிராண்ட் ஃபினாலே தொடங்கி விட்டதாகவும் பிக்பாஸ் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அது சம்பந்தமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய வலிமையை நிரூபித்து இறுதிவரை செல்வார்களா? இல்லையா? என்பதை நோக்கி இந்த நிகழ்ச்சி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

akshara reddy cries and shared the reason to arun biggboss

இந்த நிலையில் தனியாக சென்று அழுது கொண்டிருந்த பிரபல போட்டியாளர் அக்‌ஷராவுக்கு ஆறுதலாக, வருண், அவர் அருகே சென்று இருக்கிறார். என்ன விஷயம் என்று அவரிடம், வருண் வினவியபோது, தனக்கு தன்னுடைய வீட்டு ஞாபகம் வந்ததாக அழுது கொண்டே கண்களை துடைத்துக் கொண்டு அக்‌ஷராசொல்லி இருக்கிறார். இதனை அடுத்து, வருண் அவரை ஆறுதல் படுத்தி விட்டு அவரைத் தேற்றுகிறார்.

akshara reddy cries and shared the reason to arun biggboss

ஏற்கனவே அக்‌ஷரா & வருண் இருவரும், ஒருவருக்கொருவர் உறுதுணையாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து கொண்டு வருகின்றனர் என்பதை பல்வேறு நிலையிலும் காண முடிந்தது. குறிப்பாக பொம்மை டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் பொழுது அக்‌ஷராவை நகரவிடாமல் பிடித்துக் கொண்டதற்காக வருண், நிரூப்பை விமர்சித்தார். இதனை அடுத்து நிரூப்புக்கு எதிராக அந்த விளையாட்டை வருண் விளையாடத் தொடங்கினார். இதனால் நிரூப் மற்றும் வருண் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இந்த சண்டை கடுமையாகவும் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

akshara reddy cries and shared the reason to arun biggboss

People looking for online information on Akshara Reddy, Biggboss 5 tamil, Biggbossstamil5, Trending, Varun will find this news story useful.