www.garudabazaar.com

கோவிட்டுக்கு முன்… கோவிட்டுக்குப் பின்… மீண்டும் மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth admitted in hospital again

BB Ultimate : பிக் பாஸ் மேடையில் 'Thug life' காட்டிய சிம்பு.. வசமாக சிக்கிய போட்டியாளர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

தனுஷுடன் விவாகரத்து அறிவிப்பு:

சில மாதங்களுக்கு முன்பாக தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர மனமொத்து தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து தனுஷ் தான் ஒப்புக்கொண்ட படங்களில் கவனம் செலுத்திவர, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது முசாபீர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியீட்டுக்கு தயாராக வைத்துள்ளார்.

Aishwarya Rajinikanth admitted in hospital again

மருத்துவமனையில் அனுமதி:

சில வாரங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள ஐஸ்வர்யா ‘வாழ்க்கை கோவிட்டுக்கு முன் மற்றும் கோவிட்டுக்கு பின்… காய்ச்சல், தலை சுற்றல் மற்றும் சோர்வு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் அழகான மற்றும் ஆற்றலும் கொண்ட மருத்துவர்கள் உங்களை சந்திப்பதும் அவர்களோடு நீங்கள் நேரத்தை செலவிடுவதையும் நினைத்தால் உங்களால் மோசமாக உணரமுடியாது. பெண்கள் தினத்தின் மாலையை மருத்துவர் பிரீத்தியை சந்திப்பது ஒரு என்ன மாதிரியான தொடக்கம். உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன்’ எனக் கூறியுள்ளார். ஐஸ்வர்யா பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களிலும் அவருடன் மருத்துவர் பிரீத்தி இருக்க, மகிழ்ச்சியாக இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Aishwarya Rajinikanth admitted in hospital again

கீதாஞ்சலியின் நம்பிக்கை வார்த்தைகள்:

ஐஸ்வர்யாவின் இந்த பதிவுக்குக் கீழ் பலரும் அவர் சீக்கிரமே உடல்நலம் தேறி வர வேண்டும் என்று விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் மனைவியான கீதாஞ்சலி அந்த பதிவுக்கு ‘சீக்கிரம் நலம் பெறுங்கள்.  கோவிட்டுக்கு பிறகு நமது உடல் முழுவதுமே புதிதானது மாதிரிதான்’ என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

"சீக்கிரமா ஆரம்பிச்சுடலாம்.." விருப்பப்பட்ட 'இசைப்புயல்'.. கிரீன் சிக்னல் காட்டிய 'இசைஞானி'

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth admitted in hospital again

People looking for online information on Aishwarya Rajinikanth, Aishwarya Rajinikanth admitted in hospital, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் will find this news story useful.