www.garudabazaar.com

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு., நடிகை ஐஷ்வர்யா ராய் போட்டோவுடன் எமோஷனல் ஸ்டேட்மென்ட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு, நடிகை ஐஷ்வர்யா ராய் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 

நடிகை ஐஷ்வர்யா ராய் எமோஷனல் ஸ்டேட்மென்ட் | aishwarya rai's emotional statement to fans after coronavirus positive result

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் ஐஷ்வர்யா ராய். இந்தி சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம்வரும் இவர், தமிழ் சினிமாவிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு, திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிச்செயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து நடிகை ஐஷவர்யா ராய், அவரது மகள் ஆராதயா உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

நடிகை ஐஷ்வர்யா ராய் எமோஷனல் ஸ்டேட்மென்ட் | aishwarya rai's emotional statement to fans after coronavirus positive result

இந்நிலையில் நடிகர் ஐஷ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது., ''எனது தேவதையான ஆராதயாவுக்கும், அமிதாப் அவர்களுக்கும்,, எனது கணவர் அபிஷேக் மற்றும் எனக்கும் நீங்கள் காட்டிய பிரார்த்தனைகளுக்கும் அன்புக்கும் நன்றி. உங்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம். உங்களின் இந்த அன்பை கண்டு எனது இதயம் கரைந்துவிட்டது. மிக்க நன்றி'' என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் அவரும் மகள் ஆதாரயாவும் அன்புடன் கையெடுத்து வணங்குவது போன்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகை ஐஷ்வர்யா ராய் எமோஷனல் ஸ்டேட்மென்ட் | aishwarya rai's emotional statement to fans after coronavirus positive result

People looking for online information on Abhishek Bachchan, Aishwarya Rai Bachchan, Amitabh Bachchan, Coronavirus will find this news story useful.