www.garudabazaar.com

'அவரு' அவ்ளோ தூரம் சொல்றாரு... கேட்க மாட்டேன்னு 'அடம்' புடிக்கிறீங்களே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாப்பிட மட்டும் தெரியுமா? என்ற மாடுலேஷனில் அனிதா, ரியோவை பார்த்து கிச்சனில் கேட்டபோதே பஞ்சாயத்து கன்பார்ம் என தோன்றியது. அது நேற்றைய நிகழ்ச்சியில் ஏறக்குறைய நடந்தேறியது. நீங்கள் கேட்ட விதம் தப்பு என்று மறைமுகமாக கமல் அறிவுரை சொல்லியும் கூட அனிதா அதை விடவில்லை. அவர் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் ரியோவிடம் சென்று அதுகுறித்து விளக்கம் கேட்டார்.

Again clash between Anitha and Rio in Bigg Boss House

ரியோ-அனிதா இடையே அர்ச்சனா சமரசம் செய்துவைக்க முயல அது முடியாமல் கன்னித்தீவு கதை போல நீண்டது. இதை எதிர்பார்த்தோ என்னவோ மீண்டும் அகம் டிவி வழியாக நிகழ்ச்சி உள்ளே வந்தபோது கமல் அதை அறிவிக்கவில்லை. இவர்கள் இருவரின் சண்டையை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். திடீரென அவரை பார்த்து மற்றவர்கள் கத்த அதன் பின்னர் தான் அனிதா-ரியோ இருவருக்கும் அது தெரிந்தது.

ரொம்ப மசிச்சுட்டீங்க என கமல் கிண்டலடித்தும் கூட அனிதாவுக்கு அது புரியவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என அதிலேயே நின்றார். ஒருவழியாக படாதபாடு பட்டு இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன்மா ஒரு பெரிய மனுஷன் அவ்ளோ தூரம் சொல்றாரு அத கொஞ்சம் கூட  பாலோ பண்ண மாட்றீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர். பின்னர் ஒரு டாஸ்க்கின் போது அர்ச்சனா, ரியோ இருவரும் அனிதாவை இதை வைத்து கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Again clash between Anitha and Rio in Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.