’எவ்வளவு வெட்டியா இருந்தா…’ கே.வி.ஆனந்த் இப்டி கேட்கும் அளவு பிரபல நடிகர் செய்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னதாக கே.வி.ஆனந்த் சூர்யா, ஆர்யா இணைந்து நடித்த காப்பான் படத்தை இயக்கினார். இது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரது அடுத்த படத்துக்கான அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட லாக் டவுன் சூழலில் அனைத்து துறைகளும் முடங்கி இருக்கின்றன. எல்லா தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பது போல இந்த ஊரடங்கு சிலருக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிறது.

இன்று ட்விட்டரில் கலை இயக்குநரும், நடிகருமான கிரன் வெளியிட்ட பதிவில் இயக்குநர் கே.வி.ஆனந்தின் ஓவியத்தை வரைந்திருந்தார். இதற்கு அவர், மிகவும் அற்பணிப்பான இயக்குநர் கே.வி. ஆனந்த் என்று தலைப்பு கொடுத்திருந்தார்.

இதற்கு உடனடியாக ரிப்ளை செய்த கே.வி. ஆனந்த், ‘Covid 19, உன்னை எவ்வளவு வெட்டியா ஆக்கியிருந்தா, என்னையெல்லாம் ஸ்கெட்ச் போடுவ! ... இருந்தாலும் பிரமாதம்!’ என்று ரியாக்ட் செய்துள்ளார். இந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Entertainment sub editor