www.garudabazaar.com

'அவரை' காப்பாத்த தான் அர்ச்சனா இப்படி பண்றாங்க... 'ரகசிய' மீட்டிங் போட்ட ஆரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் ரியோ மாற்றி,மாற்றி பேசுவது ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யார் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள் என கேட்டதற்கு சுரேஷ் சக்கரவர்த்தி பெயரை சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு ரியோ மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து யார் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள்? என கேட்டதற்கும் சுரேஷ் பெயரை அவர் சொல்லவில்லை.

Aari Arjuna discuss about Archana's unilaterally Strategy

இதேபோல தான் நேற்றும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. யார் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள் என பிக்பாஸ் கேட்டதற்கு ஆரி பெயரை ரியோ வழிமொழிந்தார். பின்னர் யார் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள் என கேட்டதற்கு அவர் ஆரி பெயரை சொன்னார். இதனால் ரசிகர்கள் இவரு ஏன் மாத்தி,மாத்தி பேசுறாரு என குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் அனைவரும் ஆரி பெயரை சொன்னதை அடுத்து அவரும், ஆஜித்தும் பிக்பாஸ் வீட்டின் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றனர். அப்போது அனிதா, பாலாஜி ஆகியோர் அவரிடம் அமர்ந்து பேசினர். அவர்களிடம் பேசிய ஆரி, அர்ச்சனா தொடர்ந்து ரியோவை காப்பாற்ற முயற்சி செய்வதாக கூறினார். இதை பாலாஜி, அனிதாவும் ஒப்புக்கொண்டனர்.

இதைப்பார்த்த ரசிகர்கள் மனுஷன் நாம நெனைக்குற விஷயத்தை புட்டுப்புட்டு வைக்குறாரு என ஆரியை பாராட்டி வருகின்றனர். ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக அர்ச்சனாவிடம் தெரிவித்த பாலாஜி, அதற்கு உதாரணமாக ரியோ விஷயத்தில் அர்ச்சனா நடந்து கொண்டதை சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Aari Arjuna discuss about Archana's unilaterally Strategy

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.