www.garudabazaar.com

எப்படி 'அவங்கள' பத்தி... இவ்ளோ கரெக்டா 'தெரிஞ்சு' வச்சு இருக்கீங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் கிச்சன் பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. எலுமிச்சையில் ஆரம்பித்து, சப்பாத்தி, பொங்கலில் மய்யம் கொண்டு பாசிப்பருப்பு பக்கம் சென்று தற்போது புளிசாதத்தில் வந்து முடிந்துள்ளது. எலுமிச்சை பார்ட் 2 என பெயர் வைக்கலாம் போல மீண்டும் எலுமிச்சை சண்டை நேற்று ஆரம்பித்தது. இதில்  சம்யுக்தாவை கேட்க வேண்டாம் என சொன்ன அனிதா நிஷா பக்கம் வண்டியை திருப்பினார்.

Aari and Sanam Shetty talks about Anitha Sampath in Kitchen

ஆனால் அதற்குள் அனிதாவுக்கு, ஆரியுடன் இந்த விஷயத்தில் சண்டை வந்து விட்டது. ஆரி டென்ஷனாகி கத்த பின்னர் அனிதா அமைதியாக சென்றது போல பிரச்சினை முடிந்தது. ஆனால் உண்மையில் பிரச்சினை முடியவில்லை போல. இன்று கிச்சனில் சனம், ஆரி இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த பிரச்சினையை பேசி முடிக்க அனிதா முன்வர மாட்டார் என ஆரி ஆரூடம் கூறினார். அது எப்படி பாஸ் நீங்க அப்படி சொல்றீங்க? என சனம் கேட்டார்.

பதிலுக்கு ஆரி, கமல் சார் வரும்வரை இந்த பிரச்சினையை அவர் தள்ளிப்போடவே விரும்புவார். பேச ஆரம்பித்து பிரச்சினை அவர் பக்கம் திரும்பி விடக்கூடாது என்னும் ஜாக்கிரதை உணர்வு அவரிடம் அதிகம் உள்ளது என தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவங்கள பத்தி நீங்க சரியா புரிஞ்சு வச்சு இருக்கீங்க பாஸ் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆரியின் கேப்டன் பதவி முடிவுக்கு வந்ததால் இந்த பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம் என தெரிகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Aari and Sanam Shetty talks about Anitha Sampath in Kitchen

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.