www.garudabazaar.com

'ஆடியன்ஸ்'க்கு வெறுப்பு ஆகாது... என்னப்பா பொசுக்குன்னு இப்புடி பண்ணிட்ட?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சம்யுக்தா வெளியேறியதுக்கு பின் பிக்பாஸ் வீட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து உள்ளன. ரம்யா, அனிதா மற்றும் சனமுடன் நெருங்கி பழக ஆரம்பித்து இருக்கிறார். அதேபோல ரமேஷ், ஆஜீத் ஆகியோர் தங்களது ஆட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக ஆஜீத் நேற்று காலர் டாஸ்க்கை நன்றாக செய்தார். அதேபோல தற்போது அவரது ஆட்டத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

Aajeedh is Questioning against anbu Gang, Netizens Reacts

நேற்று நிஷா, ரியோ, சோம் மற்றும் கேப்ரியலா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வீடு பெருக்கி கொண்டிருந்த ஆஜீத் சீரியஸாக ஒரு விஷயத்தை கேட்டார். அதாவது விஜய் டிவியில் உங்கள் முகங்களை மட்டுமே மீண்டும், மீண்டும் காட்டுகின்றனர். இதனால் ஆடியன்ஸ் வெறுப்பு ஆக மாட்டார்களா? என கேட்டார். இதைப்பார்த்த ரியோ ஆஜீத் உண்மையா தான் அப்படி கேட்டான் என அர்ச்சனாவிடம் நடித்து காண்பித்தார்.

பிறகு அர்ச்சனா, கேப்ரியலா, ரியோ, நிஷா ஆகியோர் ஆஜீத் சொன்ன கருத்தை வைத்து கொஞ்ச நேரம் ஆராய்ச்சி செய்து, தாங்களே சிரித்து கொண்டனர். இதைப்பார்த்த ரசிகர்கள் ரொம்ப முன்னேறிட்ட தம்பி என அவரை பாராட்டி வருகின்றனர். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஆஜீத் அடுத்த வாரம் நாமினேட் லிஸ்டில் இடம்பெற மாட்டார். எனினும் இந்த வாரம் அவர் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Aajeedh is Questioning against anbu Gang, Netizens Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.