மக்கள் செல்வனுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக அரசினால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்க்கும் நோக்கில் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் 1954 ஆம் ஆண்டு முதல் இலக்கியம், இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

Vijay sethupathi got Tamilnadu Governments Kalaimamani Award

கடந்த ஆறு ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தன. தற்போது 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறப்படும் கலைஞர்கள் பட்டியலை தமிழ அரசு வெளியிட்டுள்ளது. அதில், ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு நடிகர்கள்  விஜய் ஆண்டனி, சசிகுமார், சந்தானம் சூரி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நாட்டுப்புற பாடகர்கள் பரவை முனியம்மா, வேல்முருகன் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.