Breaking : இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் 'துருவங்கள் பதினாறு' இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

Karthick Naren Made his acting debut in Sundeep Kishan's Kannadi

அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் 'நராகசூரன்' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பல்வேறு காரணங்களால் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் கார்த்திக் நரேன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் 'கண்ணாடி' என்கிற படத்தில் கார்த்திக் நரேன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.இந்த படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார்.

இந்த படம் தெலுங்கில் 'நின்னு வீடனி நீடனு நேனே' என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.