‘காதலிப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கால் டாக்ஸி டிரைவர்’.. பொள்ளாச்சியை அடுத்து நாகையில் நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 18, 2019 09:02 PM

காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்த நாகையைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Nagai police arrest taxi driver accused of sexually assaulting case

பொள்ளாச்சியில் 200 -க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம் தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருநாவுக்கரசு, சபரிநாதன், சதீஷ், வசந்தக்குமார் ஆகிய நால்வரை போலிஸார் கைது செய்தனர்.

இதனை அடுத்து இவர்கள் நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றப்பட்டது. இதன் முதற்கட்டமாக இந்த பாலியல் வழக்கில் கைதாகிவுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி போலிஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாகையைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவரான சுந்தரம் என்பவர் கல்லூரி பெண்களை காதலிப்பதாக கூறி குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பின் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து சுந்தரை கைது செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி நடந்த பாலியல் கொடுமையின் பரபரப்பு அடங்காத நிலையில் நாகையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLLACHIABUSE #NAGAPATTINAM #CALLTAXIDRIVER #NAGAISEXUALASSAULT