தேங்காய் எல்லாம் ஒரு திணுசா இருக்கே.. சந்தேகப்பட்டு உடைத்துப் பார்த்த அதிகாரிகள்.. காத்திருந்த பெரிய ஷாக்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jan 28, 2022 10:45 PM

தேங்காய்க்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police find huge shipment of liquid cocaine-filled coconuts

கொலம்பியா நாட்டு துறைமுகத்துக்கு நேற்று கப்பல் ஒன்று வந்துள்ளது. அதில் இத்தாலி நாட்டின் ஜெனிவாவில் இருந்து கண்டெய்னர் வந்துள்ளது. அப்போது துறைமுக அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Police find huge shipment of liquid cocaine-filled coconuts

அப்போது கண்டெய்னரில் 504 பெரிய பைகள் இருந்துள்ளது. அதனுள் 19,780 தேங்காய்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தேங்காயை உடைத்து பார்த்துள்ளனர்.

Police find huge shipment of liquid cocaine-filled coconuts

அதில் கொகைன் (Cocaine) என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து அனைத்து தேங்காய்களையும் சோதனை செய்து போதைப்பொருளை கைப்பற்றினர். இதனை அடுத்து இவ்வளவு அதிகமான போதைப்பொருளை அனுப்பியது யார்? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகினறனர். தேங்காய்க்குள் போதைப்பொருள் கடத்தி வந்த சம்பவம் கொலம்பியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COCONUTS #COLOMBIA

மற்ற செய்திகள்