‘எந்த மாவட்டம் முதலிடம்?.. எந்த சைட்டில் பார்க்கலாம்’.. பரபரப்பான சூழலில் வெளியான +2 தேர்வு முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 19, 2019 11:21 AM

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இந்த முறை ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகியுள்ளன.

TamilNadu Higher Secondary - plus2 exam results announced

2018-2019-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வினை 8,42,512 மாணவ, மாணவிகள் எழுதினர்.  இதில் 4,53,262  மாணவிகளும், 3,89,250 மாணவர்களும் அடக்கம்.   தமிழ்நாட்டில் உள்ள 7,083 மேல்நிலைப் பள்ளிகளில் 1,281 பள்ளிகள் இந்த தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த பொதுத் தேர்வில் ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% ஆகவும், இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.64% ஆகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.57% ஆகவும் உள்ளன. குறிப்பாக மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதை கவனிக்க முடிகிறது.

மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடத்திலும்,  ஈரோடு மாவட்டம் 95.23% தேர்ச்சி பெற்று 2-வது இடத்திலும்,  95.15% பெற்று பெரம்பலூர் மாவட்டம் 3-வது இடத்திலும் உள்ளன.

மாணவர்கள் பதிவு செய்துள்ள பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகளை 2 நிமிடங்களில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்த +2 மதிப்பெண் சான்றிதழ்களை நாளை முதல் ஏப்ரல் 26 வரை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மறுகூட்டல், விடைத்தாள் நகல் உள்ளிட்டவற்றிற்கு ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

+2 பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் பார்க்கலாம்.

http://tnresults.nic.in/

http://dge1.tn.nic.in/

http://dge2.tn.nic.in/

https://t.co/ybAzg3pb0A?amp=1