“கனவுல நீ வந்து என்ன செஞ்ச தெரியுமா?”.. இளம் பெண்களை குறிவைத்து ஆபாச உரையாடல்!.. பரவிய 'பாதிரியர்' ஆடியோ! தமிழகத்தை திடுக்கிட வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 20, 2020 02:02 PM

கோத்தகிரி அருகே இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசிய, மத போதகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Porn talk to young girls Nilgiris priest arrested பாதிரியார் கைது

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு முடியகம்பை பகுதியில் உள்ளது 'பெதஸ்தா' சபை. இங்கு அசோக் ஸ்டீபன், 58, என்பவர், மத போதகராக இருந்து வந்துள்ளார். இவர்தான், இவருடைய சபைக்கு, ஜெபிக்க வரும் பெண்களிடம், ஆபாச வார்த்தைகள் பேசியும், கையை பிடித்து இழுத்தும் மானபங்கபடுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன.

Porn talk to young girls Nilgiris priest arrested பாதிரியார் கைது

அத்துடன் அசோக் ஸ்டீபன், இளம் பெண்களிடம் கனவில் வந்ததாகச் சொல்லி ஆபாச கதைகளை சொல்லும், 'ஆடியோ' பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அத்துடன் சில பெண்களை நீலகிரியின் பல இயற்கை சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று வீடியோக்கள் எடுத்ததும் தெரியவந்துளது.

Porn talk to young girls Nilgiris priest arrested பாதிரியார் கைது

மேலும் கோத்தகிரி போலீசார் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அசோக் ஸ்டீபன், கார் கண்ணாடியை உடைத்தும், பெண்ணின் கையை பிடித்து இழுத்தும், மிரட்டல் விடுத்தது, தெரிய வந்துள்ளது.  இவரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள், நீலகிரி தர்ம அமைப்பு செயலாளர் ராமமூர்த்தி என்பவரின் மூலமாக கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், மத போதகர் அசோக் ஸ்டீபனை கைது செய்து, குன்னுார் நீதிமன்றத்தில்  மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தி, குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Porn talk to young girls Nilgiris priest arrested பாதிரியார் கைது | Tamil Nadu News.