‘பயணி, நடத்துனர் இடையே’... ‘கடுமையான மோதல்’... '5 பேர் சேர்ந்து சரமாரியாக'... 'தாக்கிய அதிர்ச்சி வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 29, 2019 06:13 PM

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனர்கள் மற்றும் பயணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

passenger attacked by government bus conductor in dindigul

திண்டுக்கலில் இருந்து தேனி செல்வதற்காக பயணி ஒருவர் அரசு பேருந்தில் பின்பக்க இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது ஓட்டுநரும், நடத்துனரும் அந்தப்பயணி அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்து சீருடையை மாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பயணி கேள்வி எழுப்பியதுடன், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடத்துனருக்கும் அந்தப்பயணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப்பயணியை கீழே இறக்கி விட்டுள்ளனர்.

வாய்த்தகராறு முற்றிய நிலையில் அந்தப்பயணியை நடத்துனர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து, நடத்துனர் மீதும் அந்தப்பயணி தாக்குதலில் ஈடுபடவே, சுற்றி இருந்த மற்ற அரசுப்பேருந்து நடத்துனர்களும். ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து அந்தப்பயணி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பயணியை ஆபாச வார்த்தைகளிலும் திட்டித் தீர்த்து கீழ தள்ளி புரட்டி எடுத்தனர்.

இதனை  அருகில் இருந்தவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வேடிக்கை பார்த்தவர்கள் ஒருவரும் தட்டிக் கேட்கவில்லை. சரமாரி தாக்குதலில் ஈடுபட்ட நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், தாக்குதலுக்கு உள்ளான பயணி மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட நடத்துனர்களையும், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அடிவாங்கிய பயணியின் பெயர் விஜய் என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Tags : #DINDUKAL