'விசாகப்பட்டினம் ரசாயன விபத்தைத் தொடர்ந்து'.. 'நெய்வேலி' அனல் மின் நிலைய 'பாய்லர் வெடித்த' சம்பவத்தில் ஒருவர் 'உயிரிழப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
![One dead in TN Neyveli Thermal plant boiler blast One dead in TN Neyveli Thermal plant boiler blast](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/one-dead-in-tn-neyveli-thermal-plant-boiler-blast.jpg)
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லரில் நேற்றைய தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தின் காரணமாக நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எனினும் இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த 8 பேரில் நிரந்தர ஊழியரான சர்புதின்(54) என்பவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)