'பக்தர்களின் ஆராதனைக்கு தயாராகும் ஆதியோகி!... இந்த 'மகாசிவராத்திரி'க்கு என்ன ஸ்பெஷல்?'... 'விழாக்கோலம் பூண்ட ஈஷா!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா மற்றும் லெபனான் நாட்டைச் சேர்ந்த் பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஈஷா மகாசிவராத்திரி விழா விடிய விடிய களைகட்ட தயாராக உள்ளது.
![maha sivarathiri to be celebrated grandly in eesha maha sivarathiri to be celebrated grandly in eesha](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/maha-sivarathiri-to-be-celebrated-grandly-in-eesha.jpg)
கோவை ஈஷா யோகா மையத்தின் 26வது ஆண்டு மகாசிவராத்திரி விழா வரும் 21ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடக்க உள்ளது. சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாட்டு புற இசைக் கலைஞரான அந்தோணி தாசன், பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் ஆகியோர் இசை விருந்தை படைக்க உள்ளனர்.
தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனாவுடன் தொடங்கும் விழா லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய களைகட்ட உள்ளது.
மகாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மகா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
மகாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)