‘எவ்வளவு சொன்னாலும் கேக்கல...’ ‘ஆட்டுக்கல்லை எடுத்து அப்படியே தன் மனைவியின்...’ லேட்டாக வந்ததால் கணவன் வெறிச்செயல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 17, 2020 01:32 PM

ஏழு வருடம் அன்யோன்யமாக குடும்பம் நடத்தி வந்த இளைஞர், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஆட்டுக் கல்லை தலையில் போட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அக்கம் பக்கதினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Husband rages on suspicion of his wife\'s behavior

குமாரவேல் (27) மற்றும் ராஜேஸ்வரிக்கு(25) திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்து, வர்ஷினி (6), ராகுல் (4) ஆகிய 2 குழந்தைகளோடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அன்வர்ஷா நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் செல்போனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

காதலர் தினம் முடிந்த இந்த நிலையில் ராஜேஸ்வரி பிப்ரவரி 14 தேதி அன்று காலையில் விட்டிலிருந்து கிளம்பி இரவே திரும்பியுள்ளார். இருவருக்கும் இடையில் விவாதமும் ஏற்பட்டுள்ளது. கோவத்தை மனதுக்குள் வைத்திருந்த குமரவேல் நேற்று முன்தினம் மனைவி இரு குழந்தைகளோடு அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது இரும்பு கம்பியால் ராஜேஸ்வரியின் தலையில் தாக்கியுள்ளார். மேலும் தன் கோவத்தை கட்டுபடுத்த முடியாமல் அருகில் கிடந்த ஆட்டுக்கல்லை எடுத்து மனைவியின் தலையில் தடாலென போட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே ராஜேஸ்வரி தலை சிதைந்து இறந்து கிடந்துள்ளார். குமரவேல் வீட்டை பூட்டிக்கொண்டு தன் குழந்தைகளுடன் தலைமறைவானார்.

காலையில் ராஜேஸ்வரியின் வீட்டிலிருந்து ரத்தம் ஆறு போல் வெளியேறவே, பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். உடலை கைப்பற்றிய போலிசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதே சமயம் காடாம்புலியூரில் பதுங்கி இருந்த குமரவேலை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் குமரவேல் அளித்துள்ள வாக்குமூலம் மேலும் திடுக்கிட வைத்துள்ளது. குமரவேல் தன் கார் ஓட்டுனர் பணியின் போது சில திருநங்கைகளுடன் தொடர்பு வைத்திருத்தாகவும், அது மனைவிக்கு தெரியவே மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி சண்டை உருவாகியுள்ளது. மேலும் ராஜேஸ்வரிக்கும் டிக்டாக்கில்  வீடியோ போடுவது, சமூக வலைத்தளங்கள் மூலம் சிலரிடம் பழக்கம் வைத்தது குமரவேலுக்கு தெரியவரவே அவரும் தன் மனைவியை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், தன் மனைவி பிப்ரவரி 14 காதலர் தினமான அன்று காலையில் வீட்டை விட்டு போய் இரவு வரவே ஆத்திரத்தில் இதையெல்லாம் செய்ததாக தெரியவந்துள்ளது.

Tags : #LOVERSDAY