'சில பேர் சொல்ற மாதிரிலாம்.. அப்பாவுக்கு'.. மேடையில் உடைந்து கண் கலங்கிய விஜய பிரபாகரன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 26, 2019 04:03 PM

தனது தந்தையும், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்த அவதூறான தகவல்களை பலர் பரப்புவதாக, மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டுள்ளார் அவரது மகன் விஜய பிரபாகரன்.

Father is fine, felt bad for rumours, prabakaran cries

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக, தேமுதிக நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா வேலூர் மாவட்டத்தின் ஆம்பூரை அடுத்த உமராபாத்தில் நிகழ்ந்தது. இவ்விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய பிரபாகரன்.

இதனையடுத்து தனது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய பிரபாகரன், தனது தந்தை விஜயகாந்தின் உடல் நிலை சீராகவே உள்ளதாகவும்,ஆனால் பலரும் அவரது உடல்நிலை குறித்த அவதூறு கருத்துக்களை பரப்புவதாகவும் பேசிக்கொண்டிருந்தபோதே மேடையில் உடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.

தழுதழுத்த குரலில் அவர் பேச முடியாமல், உணர்ச்சிவசப்பட்ட போது அவரை தொண்டர்கள் சமாதானப்படுத்தினர். அதன் பின்னர், கண்களை துடைத்துக்கொண்டு, தேவையில்லாமல், தான் அழுததாகவும் உண்மையில் விஜயகாந்த் நலமாக உள்ளார் என்பதற்காக அழுத ஆனந்தக் கண்ணீர் என்று தெரிவித்தார்.

Tags : #VIKAYKANTH #VIJAYAPRABAKARAN