'சும்மா கிழி'யென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட 'ரசிகர்கள்'...ஒரு 'கட்டு' கரும்பை சேர்த்து எடுத்ததால் ஆத்திரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 09, 2020 05:45 PM

ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தைக் காண ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தியேட்டருக்கு சென்று ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

Fans who attacked,, rage because they took a sugarcane

விழுப்புரத்தில் 4 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. இதில் ரங்கநாதன் தெருவில் தியேட்டரில் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கரும்பு,  இனிப்பு போன்றவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.

ரஜினி ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதால் ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு கரும்பு, இனிப்புகளை பெற்றுக்கொண்டனர்.

அப்போது ரசிகர் ஒருவர் தன்னுடன் வந்த நண்பர்கள் சிலருக்கும் சேர்த்துக் கொடுப்பதற்காக 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டை அப்படியே எடுக்க முயன்றார். இதை அங்கிருந்த சிலர் தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டு, கொஞ்சம் நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதைப் பார்த்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அவர்களைச் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் இரு தரப்பாக ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ரசிகர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் மேற்கு போலீஸார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள் அனைவரையும் விரட்டியடித்தனர்.

Tags : ##FANSFIGHT ##SUGARCANE ##DARBAR