'அப்பா வேண்டாம், ஆனா அவர் சொத்து மட்டும் வேணுமா'... 'மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி'... முதியவர் காட்டிய அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 16, 2021 11:20 AM

சொத்து கிடைத்ததும் பெற்றோரைப் பார்த்துக் கொள்ளாமல் தவிக்க விடும் பிள்ளைகளுக்குப் படமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

Elderly parents take back a property given to a son

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தாலுகா லத்தேரி அடுத்த காளாம்பட்டு மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு கோவிந்தசாமி, சரவணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பெங்களூரில் மளிகைக் கடை வைத்துள்ளனர். ஜானகிராமன் விவசாயம் செய்து வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக மேற்கொண்டு அவரால் வேலை செய்ய முடியாமல் போனது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தனக்குச் சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான 1½ ஏக்கர் நிலத்தை இளையமகன் சரவணனுக்கு   ஜானகிராமன் எழுதித் தந்துள்ளார். அப்போது பெற்றோரைச் சரவணன் பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் பேசப்பட்டது. ஆனால் தனது கைக்கு நிலம் வந்ததும் சரவணன், தனது தந்தை ஜானகி ராமன் மற்றும் தாய் பத்மாவை கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் வயதான காலத்தில் இருவரும் கடும் சிரமப்பட்டனர்.

ஜானகிராமன் எவ்வளவோ முயன்றும் மகன் சரவணன் பெற்றோரைக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மகன் பெயரில் நிலம் எழுதப்பட்டதை ரத்து செய்து மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் ஜானகிராமன் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் உதவி கலெக்டருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சரவணன் தனது பெற்றோர்களைப் பராமரிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மூத்த குடிமக்கள் சட்டத்தின்கீழ் சரவணன் மீது தான செட்டில்மெண்டை ரத்து செய்து அதற்கான சான்றுகளை ஜானகிராமனிடம். உதவிகலெக்டர் ஷேக்மன்சூர் வழங்கினார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elderly parents take back a property given to a son | Tamil Nadu News.