'சார், உங்களுக்கு பார்சல் பக்காவா கொரியர்ல வரும்'... 'ஆசைவார்த்தையை நம்பிய இளைஞர்'... சென்னையில் சிக்கிய காதல் ஜோடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Feb 05, 2021 01:35 PM

சென்னை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு நடந்த மோசடி குறித்து போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai online fraud held by lovers to buy cell phone

சென்னை நந்தனம் ஸ்ரீராம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். 23 வயதான இவர், ஆன்லைன் மூலம் மொபைல் போன் ஒன்றை வாங்க வேண்டி 30,000 ரூபாய் செலுத்தியுள்ளார். கொரியர் மூலம் மொபைல் போன் வந்து சேரும் என சுதாகரிடம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல நாட்களாக மொபைல் போன் வந்து சேரவில்லை.

அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதாகர், ஆன்லைன் மூலம் தனக்கு நடந்த மோசடி குறித்து சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக கூறி, குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் மற்றும் அவரது காதலி நளினி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 30,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai online fraud held by lovers to buy cell phone | Tamil Nadu News.