ஐயோ, மறுபடியும் ஒண்ணா...? 'உருவான 48 மணி நேரத்துல...' - வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள தகவல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Nov 12, 2021 09:41 AM

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை (13-11-2021) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Meteorological Department, a new depression is likely form

தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கும், வட தமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே நேற்று (11-11-2021) மாலை கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையேறிய போது, தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியதாகவும் தெரிவித்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுவிழக்கும் நிலையில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரம், சென்னையில் கனமழை மற்றும் காற்றுக்கான ரெட் அலெர்ட் தொடர்ந்து இருக்கும் என்றும், சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 13-ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது உருவான அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tags : #NEW DEPRESSION #FORM

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Meteorological Department, a new depression is likely form | Sports News.