IndParty

‘கொரோனாவுக்குப் பின் முதன்முறையாக நடக்கும் போட்டி’... ‘அதுவும் சென்னையில் தான் பர்ஸ்ட்’... ‘பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 11, 2020 03:02 PM

இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

Chennai to host 2 Tests, day-night Test and 5 T20Is in Ahmedabad, ODIs

கொரோனாவுக்குப் பின் முதன்முதலாக இந்தியாவில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து, 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர்களில் விளையாட இரண்டு நாட்டின் கிரிக்கெட் போர்டுகளும் ஒப்புக்கொண்டன. இதற்காக அந்த அணி தனது இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்ததும் அங்கிருந்து நேரடியாக ஜனவரி 27-ந் தேதி சென்னை வந்தடைகிறது.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டிகள் அனைத்தும் சென்னை, அகமதாபாத், புனே ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் பிப்ரவரி 5-ந் தேதி தொடங்குகிறது. அதன்பின் 2-வது போட்டியும் சென்னையில்தான் நடக்கிறது. இந்த போட்டி 13-ந் தேதி தொடங்குகிறது. அதன்பின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான மொதேரா மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24-ந் தேதி தொடங்குகிறது. அதன்பின் மார்ச் 4-ந் தேதி 4-வது மற்றும் கடைசி போட்டி இது மைதானத்தில் நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து 4 போட்டிகளும் இதே மைதானத்தில்தான் நடக்கிறது. 2-வது போட்டி மார்ச் 14, 3-வது போட்டி மார்ச் 16, 4-வது போட்டி மார்ச் 18, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மார்ச் 20-ந் தேதியும் நடக்கிறது.

அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேயில் மார்ச் 23-ந் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி மார்ச் 26-ந் தேதியும், 3-வது போட்டி 28-ந் தேதியும் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டெஸ்ட் போட்டி கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு இப்போது தான் மீண்டும் டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது. ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai to host 2 Tests, day-night Test and 5 T20Is in Ahmedabad, ODIs | Sports News.