'பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அடித்த அதிகாரி'... 'முதல்-மந்திரியின் பாதுகாவலருடன் நடந்த மோதல்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 25, 2021 07:36 PM

இமாச்சலப்பிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், நிதின்கட்கரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Himachal Pradesh: CM’s security officers, district cops clash in Kullu

இமாச்சலப்பிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், நிதின்கட்கரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களில் சிலர், கட்கரி பிரதமராக வேண்டும் என்று கோஷம் எழுப்பியதாகவும், அதற்கு முதல்-மந்திரியின் பாதுகாவலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Himachal Pradesh: CM’s security officers, district cops clash in Kullu

அப்போது காவலுக்கு நின்ற குல்லு போலீசாருடனும் வாக்குவாதம் ஏற்பட அது சண்டையாக மாறி உள்ளது. அப்போது குல்லு போலீஸ் சூப்பிரண்டு, முதல்-மந்திரியின் பாதுகாவலரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி அறிந்த முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், “இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில டி.ஜி.பி. 3 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று நிருபர்களிடம் கூறினார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Himachal Pradesh: CM’s security officers, district cops clash in Kullu | India News.