"இறந்த பிறகும், நான் பண்ணத ஷ்ரத்தா பாத்துட்டு தானே இருந்தா?".. அலறவிட்ட அஃப்தாப்..? சைக்கோவா? DELHI MURDER

முகப்பு > செய்திகள் > இந்தியா

By K Sivasankar | Nov 16, 2022 09:24 PM

இந்தியாவையே அதிர வைத்துள்ள இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் குறித்து புதிதாக வெளியான தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Delhi murder Shraddha Aftab case டெல்லி ஷ்ரத்தா அஃப்தாப்

Also Read | "கொலை செஞ்சுருப்பாருன்னு அன்னைக்கே ஷ்ரத்தா சொன்னா".. நண்பர்கள் சொன்ன பகீர் தகவல்!!

டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போனதை அடுத்து, ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பிறகே, அவரது காதலருடன் அவர் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்தது தெரியவந்தது, அத்துடன் ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தமது காதலர் அமீனை வற்புறுத்தியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அமீன், ஷ்ரத்தாவை கொலை செய்ததுடன் உடல் பாகங்களை ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணையில், தினமும் இரவு 2 மணியளவில் காதலியின் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமீன் வீசியதுடன்,  ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கிய அமீன் அதில் ஷ்ரத்தாவின் எஞ்சிய உடல் பாகங்களை பத்திரப்படுத்தி வைத்ததாகவும் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து, அமீன் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஷ்ரத்தாவின் நண்பர்கள் கூறும்போது, அஃப்தாப் அமீன் என்கிற அமீன், ஷ்ரத்தாவை அடிக்கவும் துன்புறுத்தவும் செய்ததாகவும், சம்பவம்  நடந்த அன்று கூட, ஷ்ரத்தா தன்னை எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல சொல்லி வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியதாகவும் தெரிவித்ததுடன், அஃப்தாப்பை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதாக எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான், ஷ்ரத்தாவை கொன்றது எப்படி ? அதன் பிறகு தாம் என்ன செய்தோம் என்பதெல்லாம் குறித்து போலீஸாருக்கு நடித்து காட்டி விளக்கிக்கொண்டிருந்தபோது, ஷ்ரத்தா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்ததாக முதலில் கூற, அனைவரும் அதிர்ந்ததாகவும், பின்னர் அவர் மீண்டும் ஃபிரிட்ஜில் இருந்த ஷ்ரத்தாவின் தலையை கூறியதாகவும் சொல்லப்படுவதுடன், அவருடைய பிஹேவியர் உள்ளிட்டவை மன நல மருத்துவர்களின் உதவியுடன் கண்காணிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் இவை குறித்த முழுமையான மற்றும் உண்மையான தகவல்கள் மேற்கொண்டு போலீஸார் வெளியிடும்போதுதான் அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Kodagu : இறந்த பெண்களின் சடலங்களை குரூரமாக வீடியோ எடுத்த பிணவறை ஊழியர்... ? கர்நாடகாவில் பரபரப்பு..!

Tags : #DELHI MURDER #SHRADDHA AFTAB CASE #டெல்லி ஷ்ரத்தா அஃப்தாப்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi murder Shraddha Aftab case டெல்லி ஷ்ரத்தா அஃப்தாப் | India News.