'நடுரோட்டில் இளைஞரை தகாத வார்தையால் திட்டி’... 'இரும்பு ராடால் தாக்கிய இளம்பெண்ணின் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 26, 2019 05:38 PM

கார்கள் ஒன்றோடொன்று உரசியதால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணான கார் உரிமையாளர், மற்றொரு காரில் வந்த இளைஞரை தாக்கிய காட்சிகள் வைரலாகியுள்ளன.

Chandigarh woman arrested for attacking man with wrench

சண்டிகர் ட்ரிபியூன் சவுக் அருகே, சாலையில் இரண்டு கார்கள் வந்து கொண்டிருந்தன. இதில் 25 வயதான இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி வந்தார். அவர், திடீரென ரிவர்ஸ் எடுக்கும்போது, பின்னால் வந்த இளைஞர் கார்மீது மோதியது. இதில், அந்தப் பெண்ணின் காருடன் லேசாக மோதியதால் இளம்பெண் ஆத்திரமடைந்து கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

இதையடுத்து, இளைஞர் ஓட்டிவந்த காரை வழிமறித்து நிறுத்திய அந்தப் பெண், அந்த காரில் வந்தவரை, தகாத வார்த்தைகளில் திட்டிக் கொண்டே, தனது காரிலிருந்து இரும்பு ராடு கொண்டு கடுமையாகத் தாக்கினார். இந்நிலையில், அங்கு அந்த போலீசார் அந்த இளம் பெண்ணை கைதுசெய்துவிசாரித்தனர். அதில், மொஹாலியைச் சேர்ந்த ஷீத்தல் சர்மா என்பது தெரியவந்தது.

மேலும் காயமடைந்த இளைஞரான நிதிஷை மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். கைதுசெய்யப்பட்ட ஷீத்தல் சர்மா மீது பல்வேறு வழக்குகளில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமையன்று மாலை நடுரோட்டில் நடைபெற்ற இச்சம்பவத்தின் காட்சிகள், செல்போனில் படம்பிடிக்கப்பட்டு வெளியாகி வைரலாகின.

Tags : #ABUSIVEWORDS #CHANDIGARH