நிச்சயம் கூரை மேல ஏறி கத்தி சொல்றேன். அதுவரை ஷட் அப் ப்ளீஸ் - வரலட்சுமியின் கோபம் எதனால்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போடா போடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமானார்.

Varalaxmi Sarathkumar puts a fullstop about her marriage rumours

தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சண்டக்கோழி 2, மாரி 2, வெல்வட் நகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.  அடுத்து சேஸிங், டானி, க்ராக் (தெலுங்கு) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் இப்படங்கள் லாக்டவுன் முடிந்த பின்னர் வெளிவரும்.

இந்நிலையில்  நடிகை வரலட்சுமிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டதாகவும், அவரது குடும்ப நண்பரான  சந்தீப்தான் மணமகன் என்றும், சந்தீப் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பொறுப்பில் உள்ளார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பானது.

இதற்கு பதில் அளிக்கும்விதமாக தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.  அதில் அவர் கூறியிருப்பது, ‘எனக்கு கல்யாணம்னா அது எனக்குத்தான் கடைசியா தெரியும் போல? ஹாஹாஹா...அதே முட்டாள்தனமான வதந்திகள்..என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு அப்படியென்ன வெறித்தனமான ஆசைன்னு தெரியலை.

எனக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னா, நிச்சயம் நான் எல்லார்கிட்டயும் வெளிப்படையா சொல்லுவேன். கூரை மேலே ஏறி கத்தி சொல்லுவேன். போதுமா? இதைப் பத்தி எழுதிக்கிட்டு இருக்கற எல்லா மீடியா மக்களே, நான் இப்ப கல்யாணம் செஞ்சுக்கலை. சினிமாவைவிட்டு விலகறதா இல்லை’ என்று தன் மனத்தில் உள்ளவற்றை பளிச்சென்று தெரிவித்துள்ளார் வரலட்சுமி.

 

வரலட்சுமியின் இந்த பதிவை விட்டுவைப்பார்களா, மீண்டும் அது செய்தியாகி வைரலாகி, வைரல் செய்தியாகி....என்று இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

Entertainment sub editor