www.garudabazaar.com

சுஷாந்த்தின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அமித்ஷாவிடம் அவரது காதலி வேண்டுகோள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. அவரது மரணம் குறித்த காரணங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நடிகை ரியா சக்ரபோர்ட்டி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில், ''நான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கேர்ள் ஃபிரெண்ட். அவர் மறைந்து ஒரு மாதம் ஆகிறது. எனக்கு அரசின் மேல் நம்பிக்கை இருக்கிறது. நீதி வேண்டி நீங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  எந்த அழுத்தம் மரணம் வரை கொண்டு சென்றது என்ற காரணம் எனக்கு  தெரிய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sushant Singh Rajput's girl friend Rhea Chakraborty urges Amit Shah for CBI inquiry | சுஷாந்த்தின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டி அமித்ஷாவி�

People looking for online information on Amit shah, Rhea Chakraborty, Sushant Singh Rajput will find this news story useful.