'குசும்பு' காரன்... நடிகர் ரியோ சொன்ன செய்தி..ரசிகர்கள் செம குஷி...வா தலைவா வா...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா அச்சறுத்தலில் இருக்கிறது. மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படி பட்ட சூழ்நிலையை இந்திய மக்கள் இதுவரை சந்தித்ததில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. வேலை செய்பவர்களும் கூட வீட்டில் இருந்து தான் வேலை செய்து வருகின்றனர். பலரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு பெரிய ஆறுதலாக இருப்பது தொலைக்காட்சியும், மொபைலும் தான். அதிலும் பல சேனல்கள் மக்களை மனரீதியாக உற்சாகமாக வைத்திருக்க சில வித்தியாசமான யோசனைகளை செய்து வருகின்றனர். படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல சூப்பர்ஹிட் படங்களை சீரியல்களுக்கு பதிலாக ஒளிபரப்புகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரியோ நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் மறு ஒளிபரப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "விஜய் டிவி குசும்பு கார பய. எல்லாரும் பாத்துருங்கப்பா" என்று கூற, கீழே கமெண்டில் ரசிகர்கள் "வா தலைவா வா" என்று கூறி உள்ளனர்.

Entertainment sub editor