NKP Other Banner USA

பிக்பாஸில் லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம் என்ன நடக்கும்? - ரேஷ்மா பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ரேஷ்மா வெளியேறினார். இந்நிலையில் அவர் பிக்பாஸில் தனது அனுபங்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

Reshma Speaks about Kavin Losliya Kamal Haasan's Bigg Boss 3

அப்போது தொகுப்பாளர் தாரா, 'பிக்பாஸில் லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்றம் என்ன நடக்கும்?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், நானும் மதுமிதா எல்லாம் குக்கிங் பன்றதுலயே டயர்டாகிடுவோம். அதனால் எப்படா லைட் ஆஃப் பண்ணுவாங்கனு காத்திருப்போம்.

வழக்கமாக கவின், சாக்ஷி, லாஸ்லியா, முகேன், தர்ஷன், அபிராமி உள்ளிட்டோர் பேசிக் கொண்டு இருப்பார்கள். ஏதாவது சொல்லி சிரிச்சுட்டே இருப்பாங்க.  அவங்க சிரிக்குற சத்தம் எங்களுக்கு நன்றாக கேட்கும்.  பிறகு அவர்கள் பகலில் அவர்கள் தூக்கம் வருது என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்'' என்றார்.

பிக்பாஸில் லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம் என்ன நடக்கும்? - ரேஷ்மா பதில் வீடியோ