கொரோனா ஊரடங்கு... ஆனந்த கண்ணீரில் திருநங்கைகள்... பிரபல நடிகர் செய்திருக்கும் பெரிய உதவி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை செய்பவர்களும். வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அநாவசியமாக யாரும் வெளியில் வருவது இல்லை. இப்படி பட்ட நிலைமையில் அரசாங்கம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் உட்பட பல சலுகைகளை அறிவித்து உள்ளது.

Popular Hero Helps Chennai Transgenders With Groceries during corona lockdown கொரோனா ஊரடங்கு நேரத்தில் திருநங்கைகளுக்கு உதவிய பிரபல நடிகர்

ஆனால் இன்னமும் கேட்பாரற்று இருக்கும் பலரது நிலைமை மிக மோசமானதாக தான் உள்ளது. அப்படிபட்டவர்களுக்கு பல பிரபலங்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலைமையில் நடிகர் ராகவா லாரன்ஸ் திருநங்கைகளுக்கு உதவி செய்துள்ளார். மாதம் முழுக்க தேவையான மளிகை பொருட்களை அவர் வழங்கி உள்ளார். இதன் மூலம் சென்னையில் உள்ள அனைத்து திருநங்கைகளும் பலன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor