www.garudabazaar.com

"இனிமே கேப்ப..".. மகளுக்காக தாயாகவே மாறிய பிரபல காமெடி நடிகர்.. படு வைரலாகும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்.

popular comedy actor wears saree for his girl baby viral pic

முன்னதாக  சிவகார்த்திகேயன், தளபதி விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக நடித்து வந்த சதீஷ், மிர்ச்சி சிவா நடித்த ‘தமிழ் படம் இரண்டாம் பாகத்தில்’ வில்லனாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே காமெடி திரைப்படம் என்பதால் இந்த படத்தில் வில்லன் சீரியஸாக இருந்தாலும் கூட காமெடியாக தெரிந்தது. அதுதான் இந்த கேரக்டர் என்பதை உள்வாங்கி சதீஷ் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சன்னி லியோனுடனான ஓ மை கோஸ்ட், குக் வித் கோமாளி பவித்ராவுடன் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத திரைபடம் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த சதீஷ், தற்போது ‘நாய் சேகர்’ என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

‘தலைநகரம்’ படத்தில் வடிவேலுவின் கேரக்டர் பெயரான நாய் சேகர் என்கிற இந்த பெயர் மிகவும் பிரபலமானது. இந்த பெயரில் வடிவேலு ஒரு திரைப்படம் நடிப்பதாக இருந்தது. இந்த நிலையில் நாய் சேகர் என்னும் டைட்டிலில் தற்போது சதீஷ் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தம்முடைய சமூக வலைதளங்களின் மூலமாக ஆக்டிவாக இருக்கும் சதீஷ், படப்பிடிப்பு தளங்களில் இருந்து தம்முடைய பல்வேறு நிகழ்வுகளை பகிர்வார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மகளுடனான சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் ஒரு புடவையை போர்த்தியபடி, மகளை தூக்கிப் பிடித்திருக்கும் சதீஷ் அத்துடன் ஒரு கேப்ஷனை பதிவிட்டிருந்தார். அதில், “அம்மா வெளியே சென்றிருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கும் போதெல்லாம்..... இனிமே கேப்ப!” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

popular comedy actor wears saree for his girl baby viral pic

People looking for online information on Sathish, Trending, Viral will find this news story useful.