CORONA : அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் நடிகை... உணவு கூட இல்லை, காப்பாத்துங்க... அதிர்ச்சி பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களை  வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். அதே போல் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் நடிகை Popular actress struck in america writes to save her with 400 indians

அந்த வகையில் “Ranchi Diaries” போன்ற படங்களில் நடித்த நடிகை சௌந்தர்யா சர்மா அமெரிக்காவில் சிக்கியுள்ளார். அவர் மட்டுமில்லாமல் தன்னுடன் இந்திய மாணவர்கள் உட்பட 400 பேர் இருப்பதாக கூறியுள்ளார். அவர் அந்த பதிவில் "இது எல்லாருக்கும் சோதனைக் காலம். ஆனாலும் என்னுடன் மாணவர்கள் சிக்கியிருப்பது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரியான தங்குமிடமும், உணவு வசதிகள் கூட இல்லை. நான் இந்திய தூதரகம் மற்றும்  வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு ஏற்கனவே கடிதம் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Entertainment sub editor