RRR Others USA
www.garudabazaar.com

பாக்கியலட்சுமி சீரியல் மேல புகாரா?.. பரபரப்பை ஏற்படுத்திய தகவல்.. உண்மை என்ன?. Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி தொடருக்கு எதிராக போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police case on baakiyalakshmi serial truth revealed

RRR FDFS: படம் எப்படி இருக்கு? தெறிக்க விடும் public கமெண்ட்ஸ்.. வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடருக்கு, பல தமிழ் மக்கள் தீவிர விசிறிகளாக உள்ளனர்.

இந்த சீரியலின் முதன்மை கதாபாத்திரங்களான பாக்கியலட்சுமி, கோபி மற்றும் ராதிகா ஆகியோரின் விவகாரங்கள் தான், பல திருப்புமுனைகளுடன் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

கோபி ஆடும் டபுள் கேம்

அதிலும் குறிப்பாக, பாக்கியலட்சுமியின் கணவரான கோபி, மனைவியை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டி, துடியாய் துடிக்கிறார். இதற்காக, மனைவியை விவாகரத்து செய்யும் அளவுக்கும் கோபி தயாராகி இருந்தார். இதனையடுத்து, கணவரின் போக்கு பற்றி, பாக்கியலட்சுமிக்கு சந்தேகம் வந்த போதும், தன்னுடைய நாடகத்தால், தொடர்ந்து பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா என இருவரையும் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார் கோபி.

 Police case on baakiyalakshmi serial truth revealed

போலீசில் புகார்?

இப்போது சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருக்கும் கோபி, நிச்சயம் வசமாக இருவரிடமும் ஒரு நாள் சிக்கத் தான் போகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம், கோபியின் டபுள் கேம் குறித்த பல மீம்ஸ்களும் இணையத்தில் அடிக்கடி வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, பாக்கியலட்சுமியின் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி குறித்து தான், தற்போது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 Police case on baakiyalakshmi serial truth revealed

தவறான காட்சிகள்?

பாக்கியாவின் மாமனார் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், படுத்த படுக்கையாக உள்ளார். அவரை பார்த்துக் கொள்வதற்கு வேண்டி, பிசியோதெரபிஸ்ட் ஒருவர் வருகிறார். இந்த நபர் மீது, பாக்கியாவின் மகளான இனியாவிற்கு காதல் உருவானதாக கூறப்படுகிறது. இதன் பெயரில், பாக்கியாவின் குடும்பத்தினர், அந்த பிசியோதெரபிஸ்ட் மற்றும் அவரது தொழில் குறித்து, சில தவறான வார்த்தைகளையும் பேசிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

 Police case on baakiyalakshmi serial truth revealed

உண்மை என்ன?

இந்த காட்சியால் தான், தற்போது எதிர்ப்பு கிளம்பி, பாக்கியலட்சுமி தொடரின் குழுவினர் மீது போலீசில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. இது பற்றி, 'Behindwoods' தரப்பில் பாக்கியலட்சுமியின் குழுவினரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

அப்போது, தங்களின் தொடர் மீதான புகார் பற்றி பேசிய அவர்கள், அப்படி எதுவும் நாங்கள் கேள்விப்படவில்லை என்றும், அது பற்றி தகவல் தெரிந்தால் நிச்சயம் தெரிவிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே போல, இந்த தகவல் தவறான ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"கடலுக்கே ஜுரம் வந்துரும்.." பிகினியில்.. சன்னி லியோன்.. மாலத்தீவு on சன்னி கண்ட்ரோல்..

தொடர்புடைய இணைப்புகள்

Police case on baakiyalakshmi serial truth revealed

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.