கொரோனா வைரஸினால் ஊரடங்கு.... ஆனா பிரபல ஹீரோவின் படத்தின் முழு வீச்சில் எப்படி ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது 'காடன்', 'நேற்று இன்று நாளை 2', 'எஃப்ஐஆர்' உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார். இதில் எஃப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷாலுடன் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ளார்.  மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர் படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

இந்த படத்தின் இயக்குநர் கௌரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நடைபெறவில்லை. இருப்பினும், எடிட்டிங் போன்ற பணிகள் தனியாளாக செய்யக்கூடியது என்பதாலும், வெளியில் வர அவசியம் இல்லை என்பதாலும் அத்தகைய பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் எஃப்ஐஆர் படத்தின் எடிட்டர் ஜிகே பிரசன்னா, இந்த ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றி, எஃப்ஐஆர் படத்தின் எடிட்டிங் பணிகள் முழுமையயாக நடைபெறுகிறது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor