Yaanai

திருமணத்துக்கு பின் முதல் நாள் சினிமா படப்பிடிப்பு.. களமிறங்கிய நயன்தாரா! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருமணத்திற்கு பின் முதல்முறையாக நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

Nayanthara First Film Shoot Jawaan after Marriage

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Nayanthara First Film Shoot Jawaan after Marriage

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பகிர்ந்துள்ளார். இந்த  வீடியோக்கள் & புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.  இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

திருமணத்துக்கு பின் முதல் நாள் சினிமா படப்பிடிப்பு.. களமிறங்கிய நயன்தாரா! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara First Film Shoot Jawaan after Marriage

People looking for online information on Atlee, Jawaan, Nayanthara, Shahrukh Khan will find this news story useful.