மொரட்டு சிங்கில்ஸ் மன்னிச்சிக்கங்க ப்ளீஸ்! சாந்தனுவின் லேட்டஸ்ட் கோரிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகத்தை ஒரேடியாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பிரச்னையை தடுக்க இந்திய அரசு பல வழிகளை யோசித்து திட்டங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நீண்ட லாக்டவுன் காலகட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் ஆசை அனைவருக்கும் அந்த பயத்தின் நடுவேயும் உள்ளது என்பதுதான் உண்மை.  இந்த நோய்த் தொற்று பரவாமல் இருக்க ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கூடுமான வரையில் வீட்டிலேயெ இருப்பதும்தான்.

அனைத்து இயக்கங்களும் மந்தமாக இருக்க சோஷியல் மீடியா எப்போதும் போல் பரபரப்பாகவே இயங்கி வருகிறது. திரைத்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும், நடிகர்கள் இயக்குநர்கள் தங்களுடைய அடுத்த கட்ட வேலையை ப்ளான் செய்தபடி இருக்கின்றனர். தங்களுடைய ரசிகர்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்து பேசி வருகின்றனர்.

எப்போதும் ட்விட்டரில் பரபரப்பாக இயங்கி வருபவர் சாந்தனுவும் அவரது மனைவி கிகி விஜய்யும்.   இந்த லாக்டவுன் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை கூர்மையாக கவனித்து அதில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் சாந்தனு. அவ்வப்போது ஜாலி போஸ்டுகளையும் போட்டும் கலக்குவார்.  ட்ராபிக் போலீஸ்காரர்  ரஷீத் பற்றிய பதிவாக இருந்தாலும் சரி, வாத்தி ஸ்டெப்பாக இருந்தாலும் சரி சாந்தனுவின் ரசிகர்கள் அவருடைய ட்வீட்டுக்களை லைக்குகளால் பாராட்டிக் குவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது சாந்தனு அவருடைய மனைவி கிகி விஜய்யை  வீடியோ எடுத்து, அதை எடிட் செய்து, 'லைட்டா ஃபீல் பண்ணிட்டேன், முரட்டு சிங்கிள்ஸ் மன்னிக்கவும் என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கிகி விஜய்யை ரசனையுடன் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது.

 

Entertainment sub editor