www.garudabazaar.com
iTechUS

அத்துமீறிய விவகாரம்.. அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்புக் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் சங்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரரைப் போற்று  நடிகை அபர்ணா பாலமுரளியிடம் எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் மன்னிப்பு கேட்டுளளது.

Law College students union Apologises to Aparna Balamurali

இவர் மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் (2016), சண்டே ஹாலிடே (2017) ஆகிய படங்களில் நடித்ததற்காக பிரபலமாக அறியப்பட்டவர்.

8 தோட்டாக்கள் (2017) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாள மயம் (2019) என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்தார். மலையாளத்தில் அவரது அடுத்தடுத்த படங்கள் திருசிவபேரூர் கிளிப்தம் (2017), மிஸ்டர் & மிஸ் ரவுடி (2019) மற்றும் ஜீம் பூம் பா (2019) இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

Law College students union Apologises to Aparna Balamurali

சூர்யா நடித்த சூரரைப் போற்று (2020) படத்தில் பொம்மியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக 2022 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை  வென்றார்.

அபர்ணா பாலமுரளி, தற்போது மலையாளத்தில் தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.  ‘தங்கம்’  படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. 

Law College students union Apologises to Aparna Balamurali

அந்த நிகழ்வில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு  பூங்கொத்து வழங்கி வரவேற்றார், பின்னர் அந்த மாணவர் அபர்ணா தோள் மீது கையை வைத்து புகைப்படம் எடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபர்ணா பாலமுரளி, சற்று சுதாரித்துக் கொண்டு அந்த நபரிடமிருந்து விலகினார். இச்செயலுக்கு அந்த நபர் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்பு கேட்டுகொண்டார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் மாணவர் மீது கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் தனது முகநூல் பக்கத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். "எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் அன்று (18/01/2023) நடைபெற்ற யூனியன் பதவியேற்பு விழாவில், மாணவர் ஒருவர் திரைப்பட நட்சத்திரத்திற்கு எதிராக அநாகரீகமான சம்பவத்தை நடத்தியது மிகவும் வருத்தமளிக்கிறது.  இச்சம்பவம் தொடர்பாக நடிகருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு கல்லூரி மாணவர் சங்கம் மனதார வருந்துகிறது". என அந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சங்கம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Law College students union Apologises to Aparna Balamurali

People looking for online information on Aparna Balamurali, Ernakulam will find this news story useful.