அவங்கள பத்தி நெனைச்சா 'இதயமே'... நடிகை குஷ்பூ உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா, அரசியல் என இரண்டிலும் தொடர்ந்து பயணித்து வரும் நடிகை குஷ்பூ சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி சமூக நலன் சார்ந்தும் தொடர்ந்து பதிவுகள் இட்டு வருகிறார்.

கொரோ கொடுத்த விடுமுறை குஷ்பு | Khushbu tweet about corona

இந்தநிலையில் தற்போது கொரோனா குறித்து உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ''எதிர்பாராத இந்த விடுப்பு மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோருடனும், குடும்பத்துடனும் நேரத்தை செலவழிப்பதற்கு, வீட்டை சுத்தம் செய்வது மற்றும் ஒழுங்கு செய்வதற்கு நேரம் கிடைத்துள்ளது. ஆனால் தினசரி வேலைக்கு சென்றால் தான் உணவு என்கிற மக்களை நினைக்கும் போது தான் இதயம் வலிக்கிறது,'' என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

Entertainment sub editor