NKP Other Banner USA

'ஜாக்பாட்’-க்கு பிறகு ஜோதிகா போட்டிருக்கும் மாஸ்டர் Plan

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஜாக்பாட்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Jyothika's Ponmagal Vandhal shooting happening in ooty

‘குலேபகாவலி’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜாக்பாட்’. இப்படத்தில் நடிகைகள் ஜோதிகா மற்றும் ரேவதி முன்னணி நடிகைகளாக நடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஜோதிகா நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து ‘பாபநாசம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சத்யராஜ், பழம்பெரும் நடிகை சௌக்கார் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதனிடையே, சூர்யாவின் 2D எண்டர்டென்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இப்படத்தை JJ Fredrick இயக்கும் இப்படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘96’ திரைப்பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் மலைகளின் அரசியாக திகழும் ஊட்டியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.