கொரோனாவிற்கும் 'அஞ்சாத' படக்குழு... 'எங்க' நடத்தி இருக்காங்க பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு தனக்கான முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேடித்தேடி நடித்துக் கொண்டிருக்கின்றார் அருண் விஜய். சினிமாவில் சினிமாவில் இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டும் என முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றார்.

படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பி அருண்விஜய்|Arunvijay team return back to chenni

கோலிவுட்டில் தனது 25-வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அருண் விஜய் ‘குற்றம் 23’ பட இயக்குநருடன் இன்னும் பெயரிப்படாத தனது 31-வது படத்தில் நடித்து வருகின்றார். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கும் இவ்வேளையில் இந்த படக்குழுவினர் தங்கள் படப்பிடிப்பை டெல்லியில் முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.

இது குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் “ டெல்லி படப்பிடிப்பை பாதுகாப்பாக முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பியுள்ளோம். எங்களுடன் பணிபுரிந்த அனைத்து நண்பர்களுக்கும், படக் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor