''வரேன்னு சொன்னவங்களே இன்னும் வரல..'' - அரசியல் என்ட்ரி கேள்விக்கு கஸ்தூரி பளிச் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கஸ்தூரி தனது அரசியல் வருகை குறித்த கேள்விக்கு ட்விட்டரில் பளிச் பதிலளித்துள்ளார்.

அரசியல் பற்றி கஸ்தூரி கருத்து | actress kasthuri's opinion on her political entry after rajinikanth recent press meet

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக புகழப்படுபவர் ரஜினிகாந்த். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் இவர் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தினார். அதில் தனக்கு முதல்வர் பதவியில் விருப்பமில்லை எனவும், கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் எனவும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் நிலைபாட்டுக்கு பாராட்டுக்களும் விமர்சனங்களும் வந்தன. 

இதனிடையே ட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம் அவரது அரசியல் வருகை குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், வெயிட், வெயிட்.. என்ன அவசரம். வரேன்னு சொன்னவங்களே இன்னும் வரல. நான் எதுவும் சொல்ல கூடாது இல்லையே'' என அவர் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை பற்றிய வேளையில் கஸ்தூரியின் இந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

Entertainment sub editor