விக்ரம் இனி நடிக்கப் போவதில்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமது மகன் துருவ்வின் வளர்ச்சிக்காக நடிகர் விக்ரம் சினிமாவிலிருந்து விலகப் போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் ஆதாரமற்ற செய்தி. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. இதுகுறித்து அவரது அதிகாரபூர்வமான பி.ஆர்.ஓ.யுவராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

Actor Vikram stops rumors with an official statement

''இந்த செய்தியைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம்.  இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்பதை இதன்மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன், அதிகாரபூர்வமாக அணுகப்பட்டு சரி பார்க்கப்பட்ட பின்னர்தான் வெளியிட வேண்டும்.  

சீயான் விக்ரம் சார் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார், அதனைத் தொடர்ந்து மணிரத்னம் சாரின் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும்,  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித் சாருடன் ஒரு படத்திலும் நடிக்கிறார். அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார்,  மேற்சொன்னவை அவரது படங்களில் ஒரு சிலவை மட்டுமே.

எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் சரிபார்த்து தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ’’ என்று சியான் விக்ரமின் அதிகாரப்பூர்வ பி.ஆர்.ஓ யுவராஜ் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor