BREAKING : நடிகர் விஜய் சேதுபதி படம் ஊரடங்கு முடிந்த உடனேயே ரிலீஸ்.... களத்தில் இறங்கிய படக்குழு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சினிமா துறை சார்ந்த பலரும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி படம் ஊரடங்கு முடிந்த உடனேயே ரிலீஸ்Actor Vijay sethupathi long waited film to be release after corona lockdown

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் 'இடம் பொருள் ஏவல்'. இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருந்தார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கொரோனா ஊரடங்கு முடிந்த உடனேயே படத்தை ரிலீஸ் செய்ய இருக்கின்றனராம். தற்போது இந்த வேலையில் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மிக மும்முரமாக இறங்கி உள்ளனர். எனவே கொரோனா ஊரடங்கு முடிந்து, தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்பு ஒரு நல்ல செய்தி வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Entertainment sub editor

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விஜய் சேதுபதி படம் ஊரடங்கு முடிந்த உடனேயே ரிலீஸ்Actor Vijay sethupathi long waited film to be release after corona lockdown

People looking for online information on Idam Porul Eval, Thirupathi Brothers, Vijay Sethupathi will find this news story useful.