'அந்த க்ரேன் என் மேலயே விழுந்திருக்கலாம்..!" - கமலின் இந்தியன்-2 விபத்து - ஷங்கர் உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமலின் இந்தியன்-2 விபத்துக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் உருக்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.

கமலின் இந்தியன்-2 விபத்து குறித்து ஷங்கர் கருத்து | shankar's tweet after kamal's indian-2 accident

கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. ஷங்கர் இயக்கி வரும் இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே அண்மையில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழிந்தனர்.

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் அதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், 'மிகவும் சோகமாக இதை ட்வீட் செய்கிறேன். அன்று நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு அதே அதிர்ச்சியில் தான் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர் உட்பட இறந்தவர்களை நினைத்து தூக்கமின்றி தவிக்கிறேன். அந்த க்ரேன் விழும் போது நூலிழையில் நான் தப்பித்தேன், ஒருவேளை அந்த க்ரேன் என் மீதே விழுந்திருக்கலாம் என தோன்றுகிறது. அவர்களின் குடும்பத்துக்கு என இரங்கலையும் வேண்டுதலையும் தெரிவித்து கொள்கிறேன்'

Entertainment sub editor