www.garudabazaar.com

ஆரிக்கு வந்தா 'தக்காளி' சட்னி... உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நேற்று ஒரு வித்தியாசமான டாஸ்க் அளித்தார். கோழி-நரி டாஸ்க் என இதற்கு பெயர் வைத்து ரூல்ஸை அறிவித்தார். ஒவ்வொரு முறையும் போட்டியாளர்கள் இரண்டு பேருக்கு முட்டை அளிக்கப்படும். அவர்கள் கோழியாகவும், மீதமிருக்கும் போட்டியாளர்கள் நரிகளாகவும் மாற வேண்டும். இதற்காக ஒவ்வொரு போட்டியாளருக்கும் தலா 200 ரூபாய் அளிக்கப்படும். இதை வைத்து பேரம் பேசி தங்களது ஆட்டத்தை விளையாடலாம்.

Why all BB Contestants are targeting Aari Arjunan?

டாஸ்க்கின் முடிவில் யார் அதிக பணம் வைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு சிறப்பு பவர் அளிக்கப்படும். இதையடுத்து இந்த முட்டை-நரி டாஸ்க் தொடர்ந்தது. முதலில் ஆரி, பாலாஜி இருவருக்கும் முதலில் முட்டை கிடைத்தது. அவர்கள் தங்கள் முட்டையை பாதுகாத்து கொள்ள நரிகளிடம் பேரம் பேசினார். தனித்தனியே நரிகள் முட்டையை அட்டாக் செய்ய வேண்டும் என்பது தான் ரூல்ஸ். ஆனால் மொத்த நரிகளும் சேர்ந்து ஆரியை அட்டாக் செய்து அவரது முட்டையை திருடினர்.

இப்படி விளையாடக்கூடாது என ஆரி எவ்வளவோ சொல்லியும் யாரும் கேட்கவில்லை. ஆனால் ஆரி நரியாக மாறியபோது நரிகள் ஒருவர் பின் ஒருவராக தான் கோழியை அட்டாக் செய்ய வேண்டும் என ரூல்ஸ் போட்டனர். இதைப்பார்த்த ஆரி ரசிகர்கள் 8 பேரு சேர்ந்து அவரை அட்டாக் செய்து அவருடைய முட்டையை திருடினர். ஆனால் இப்போது ரூல்ஸ் பேசுகின்றனர். ஆரி இழந்த முட்டையை அவருக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Why all BB Contestants are targeting Aari Arjunan?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.